பல நோய்க்கு மருந்தாகும் ராகி!

ByEditor 2

Dec 30, 2024

ராகியில் பல உணவுகள் செய்து சாப்பிடுவது வழக்கம். இது இது ஆண்டுதோறும் பயிரிடப்படும் தானியப் பயிராகும், இது எத்தியோப்பியா, இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது.

ஏராளமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய ராகி, செரிமானத்தை மேம்படுத்துதல், இதய நோய் அபாயத்தைக் குறைத்தல், முதுமையைக் குறைத்தல் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல் போன்ற ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.

இதில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள், கொழுப்புகள் மற்றும் புரதங்கள், முக்கிய நுண்ணூட்டச்சத்துக்கள் – வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் – அனைத்து அத்தியாவசிய மேக்ரோனூட்ரியன்களையும் இது உள்ளடக்கியுள்ளது.

ஆனால் இதை குறிப்பிட்ட சிலர் சாப்பிட கூடாது அப்படி சாப்பிடால் அவர்களுக்கு பக்க விளவை உண்டாக்கும். அது பற்றிய முழு விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கேழ்வரகில் நார்ச்சத்து அதிகதாக காணப்படுகின்றது. பொதுவாக நாம் சாப்பிடும் அரிசியை விட இந்த ராகியில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலில் இரும்பு சத்து குறைபாடு அதிகதாக இருப்பவர்கள் ரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் ராகியை எடுத்துக் கொண்டால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

இதில் அதிகளவு நார்ச்சதது இருப்பதால் நீண்ட நேரத்திற்கு பச்சி உணர்வை நிறுத்தி வைக்கும். இதனால் அதிகதாக சாப்பிடுவதை தடுத்து உடல் எடையை கட்டுப்படுத்தும்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ராகியை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

கேழ்வரகை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

பொதுவாக சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் கேழ்வரகை சாப்பிடக்கூடாது. மீறி இதை சாப்பிடும் போது சிறுநீரக பிரச்சனை அதிகரிகக்கும்.

இதற்கு காரணம் இதில் காணப்படும் அதிகளவான கால்சியம் தான். தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு கேழ்வரகு நல்லதல்ல.

கேழ்வரகை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவே மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *