உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (27) நடைபெறவுள்ளது.
இந்த போட்டி சென்னையில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா 02 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் அணி 06 ஆவது இடத்திலும் உள்ளன.
இதன்படி இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது பாகிஸ்தான் அணிக்கு போட்டித் தொடரில் முன்னேறுவதற்கு முக்கியமானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.