யாழ். வடமராட்சி, துன்னாலைப் பகுதியில் 15 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை எடுத்துச் சென்றவர் தப்பிச் சென்றுள்ளார்.
துன்னாலைப் பகுதியில் புதன்கிழமை (04) அன்று காங்கேசன்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது துன்னாலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் கசிப்பை எடுத்துச் சென்ற ஒருவரை மறிக்க முற்பட்டபோது கசிப்புக் கலனை வீசிவிட்டு அவர் தப்பிச் சென்றுள்ளார்.
மீட்கப்பட்ட கலனில் இருந்த 15 லீற்றர் கசிப்பைக் காங்கேசன்துறை பிராந்தியக் குற்றத் தடுப்புப் பிரிவினர் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தியுள்ளனர்.
