இலங்கை கிரிக்கெட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றமைக்காக வாழ்த்துக்கள்!

Byadmin

Apr 19, 2024

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சாமரி அத்தபத்துவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான அபார வெற்றிக்கு ஜனாதிபதி சாமரி அத்தபத்துவுக்கு தனிப்பட்ட ரீதியில் வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
17 ஆம் திகதி தென்னாபிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி மகளிர் கிரிக்கெட் வரலாற்றை தங்க எழுத்துக்களில் பதிவு செய்ய முடிந்தது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள்  சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 139 பந்துகளில்  ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்கள் குவித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியமைக்காகவும்,  மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களை துரத்தி அடித்து பதிவு செய்த  சாதனை வெற்றியாகவும் இந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *