எஹலியகொட வாகன விபத்து – ஒருவர் பலி

ByEditor 2

Jul 21, 2025

எஹலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிஎல்ல வீதியின் தங்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

எஹலியகொட பிரதேசத்தில் இருந்து கிரிஎல்ல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின் இருக்கையில் பணித்தவர் காயமடைந்த நிலையில் எஹலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதன்போது முச்சக்கரவண்டி சாரதி சிகிச்சைப் பலனின்று உயிரிழந்துள்ளதோடு, மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் மற்றைய நபரும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். 

எஹலியகொட, பஹலகம பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். 

சடலம் எஹலியகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை எஹலியகொட பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *