விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு

ByEditor 2

Jul 14, 2025

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீண்டும் பரிசீலிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று (ஜூலை 14) முதல் ஜூலை 28 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றிய மொத்த பரீட்சார்த்திகளில் 73.45% பேர் உயர்தரத்துக்கு செல்வதற்கான தகுதிகளைப் பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *