“பொதி செய்யப்படாத எண்ணெய் விற்பனை நிறுத்தப்படும்”

ByEditor 2

Jul 14, 2025

சந்தையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனையை நிறுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தேங்காய் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சாந்த ரணவக்க  தெரிவித்தார்.

ஊடக சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (13) அன்று இடம்பெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் பல்வேறு வகையான எண்ணெய்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த எண்ணெய்களை உட்கொள்வதால் தொற்றாத நோய்கள் ஏற்படும் என்று பலர் கூறுவதாகவும் அவர் கூறினார்.

எனவே, தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் சந்தையில் வெளியிடப்படும் எண்ணெய்யை உற்பத்தியாளர் உட்பட தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய பொதியுடன் சந்தைக்கு வெளியிட வேண்டும் என்று அவர்  தெரிவித்தார்.

இந்த சூழ்நிலைக்கு ஏற்ப சில மாதங்கள் அவகாசம் அளிப்பதாகவும், பின்னர் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

சந்தையில் தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் கலப்பட எண்ணெய் விற்பனையைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *