பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

ByEditor 2

Jul 11, 2025

பாணந்துறை – ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அடையாளம் தெரியாத நபர் குறித்த பகுதியிலுள்ள வீட்டின் ஜன்னலை உடைத்து அவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள்  தெரியவரவில்லை. 

சந்தேக நபர்களைக் கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குடு சலிந்துவிற்கும் நிலங்கவிற்கும் இடையிலான மோதலில் குடு சலிந்துவின் தரப்பில் ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *