கந்தானையில் துப்பாக்கிச் சூடு

ByEditor 2

Jul 3, 2025

கந்தானையில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் தற்போது ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

(செய்தி பின்னிணைப்பு 10:53 AM)

கந்தானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவரில், மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹாரவும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

(செய்தி பின்னிணைப்பு 11:14 AM)

கந்தானையில் இன்று (03) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில், காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து இன்று காலை குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹார என்பது குறிப்பிடத்தக்கது.

(செய்தி பின்னிணைப்பு 12:28 PM)

கந்தானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று (3) காலை 10 மணியளவில் கந்தானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத இருவர் T-56 ரக துப்பாக்கியால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். 

காரில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காரில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

காயமடைந்த இரண்டு பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும், சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீர மனஹார எனவும் தெரியவந்துள்ளது. 

துப்பாக்கிச் சூட்டில் அவர் காயமடைந்த போதிலும், அவரது நிலைமை மோசமாக இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் உபாலி அமுனுவில எனவும், அவர் சமீர மனஹாரவின் மைத்துனர் என்றும் கூறப்படுகிறது. 

இருவரும் உடற் பயிற்சி நிலையத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​அவர்களது வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் வைத்து இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, மேலும் கந்தானை பொலிஸார் உட்பட பல பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *