யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மின்கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளனர்.
மாடு குறுக்கிட்டதால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் புன்னாலைக்கட்டுவன் – சுன்னாகம் வீதியில் சுன்னாகம் பகுதியில் நேற்று மாலை மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சுன்னாகம், கந்தரோடையைச் சேர்ந்த 17, 18 வயது இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.