பஸ் சாரதிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம்

ByEditor 2

Jun 28, 2025

சகல பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகளுக்கு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் ஆசனப்பட்டிகளை கட்டாயமாக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா இன்று (27) தெரிவித்தார்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் சர்வதேச தரம் வாய்ந்த நடைமுறைகளுக்கு அமைய போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *