இலங்கையில் இன்று சம்பவித்த மற்றுமொரு கோர விபத்தில் பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பதுளை – துங்ஹிந்த பகுதியில் சுற்றுலா பேருந்தொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.