ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய கருப்பந்தைல மரம் சாய்ந்து உள்ளது. இதனால் இதனால், அப்பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இன்று மாலை 5.30 மணியளவில் வீசிய காற்று காரணமாக சுமார் 150 அடி உயரம் கொண்ட பாரிய கருப்பந்தைல மரம் ஒன்று நிவ்வெளி பகுதியில் பிரதான வீதிக்கு குறுக்கே சாய்ந்துள்ளது.
இதன் காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதனை அகற்ற நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் முயற்சி செய்து வருகின்றனர்.