உப்பு தட்டுபாடு; நிவர்த்தி செய்ய நடவடிக்கை

ByEditor 2

Jun 12, 2025

இலங்கையில் நிலவும் உப்பு தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 30,000 மெட்ரிக் தொன் உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கடந்த மே மாதம் 22ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 7ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18,163 மெட்ரிக் தொன் உப்பு நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பின் மொத்த மதிப்பு 1,291 மில்லியன் ரூபா ஆகும். அதேவேளை உப்பு இறக்குமதிக்காக 571 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *