பிள்ளைகளுக்கு உடலியல் தண்டனையில் திருத்தம்

ByEditor 2

Jun 11, 2025

உடலியல் தண்டனை மூலம் பிள்ளைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் உள துன்புறுத்தல் அதிகரித்திருப்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவேஎந்தவொரு துறையிலும் உடல் தண்டனை மூலம் துன்புறுத்தலுக்கு உள்ளாவதனை தடை செய்தல் மற்றும் உடல் துன்புறுத்தலுக்காகத் தண்டனை விதிப்பதற்கான ஏற்பாடுகளை விதிப்பதற்காக (19 ஆவது அதிகாரம்) தண்டனைச் சட்டக் கோவையை திருத்தம் செய்வதற்காக 2024-04-29 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமையஏற்புடைய பணிகளுக்கு சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட தண்டனைச் சட்டக் கோவை (திருத்தச்) சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டுபாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும்அதற்கமைய செயற்பட முடியவில்லை.

குறித்த சட்டமூலத்தை துரிதமாக அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *