2 பேருக்கு புதிய கொரோனா, பழைய கொரோனாவினால் குழந்தை உயிரிழப்பு

ByEditor 2

Jun 2, 2025

கொரோனா புதிய திரிபுகளால் பாதிக்கப்பட்ட இருவரை அடையாளம் கண்டுள்ளதாக இலங்கை மருத்துவ ஆய்வு நிறுவனம் (MRI) தெரிவித்துள்ளது. இருவரும் புதிய ஒமிக்ரான் துணை திரிபுகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் (MRI) தெரிவித்துள்ளது. 

முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நாட்பட்ட நோயாளர்கள் முகக் கவசத்தை அணிவது, கூட்டங்களைத் தவிர்ப்பது அவசியம் என்றும் (MRI) குறிப்பிட்டது.

காலி தேசிய மருத்துவமனையில் ஒன்றரை மாதக் குழந்தை இறந்தது தொடர்பில் கொழும்பு மருத்துவ ஆய்வு நிறுவனம் நடத்திய பரிசோதனையில், குழந்தைக்கு கொவிட்-19 தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், இதிலுள்ள திரிபு புதிதாக அடையாளம் காணப்பட்ட துணை வகைகளுடன் தொடர்புடையதல்ல என்று சுகாதார அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *