ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞன் கைது

ByEditor 2

May 26, 2025

அம்பாறை மாவட்டம்  பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில்  ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞன் ஒருவன்     கல்முனை விசேட அதிரடிப் படையினரால் வெள்ளிக்கிழமை(23)  இரவு    கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 26 வயது மதிக்கத்தக்க 2 பிள்ளைகளின் தந்தையான  மருதமுனை  பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்  கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அவரிடமிருந்து 710  மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன்  சந்தேக நபர் உட்பட  சான்றுப் பொருட்கள் யாவும்  சட்ட நடவடிக்கைக்காக பெரியநீலாவனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும்  இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் வழிகாட்டலில்   முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *