உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கல் பலவற்றில் மாலை 04 மணி வரையலான வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ தாண்டியுள்ளது.
4 மணி வரை பதிவான மொத்த வாக்குப்பதிவு வீதம் வெளியிடப்பட்டுள்ளது.
மன்னார் – 70%
திருகோணமலை – 67%
பொலன்னறுவை – 64%
அநுராதபுரம் – 64%
காலி – 63%
திகாமடுல்ல – 63%
மாத்தளை – 62%
மட்டக்களப்பு – 61%
மொனராகலை – 61%
களுத்துறை – 61%
வவுனியா – 60%
பதுளை – 60%
முல்லைத்தீவு – 60%
நுவரெலியா – 60%
முல்லைத்தீவு – 60%
இரத்தினபுரி- 60%
கிளிநொச்சி – 60%
கேகாலை – 58%
கண்டி – 58%
யாழ்ப்பாணம் – 57%
மாத்தறை- 58%
புத்தளம் – 55%
கொழும்பு- 52%
