நாட்டின் பல இடங்களில் மழை

ByEditor 2

May 4, 2025

நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
 
அந்தவகையில், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்பு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 
 
மேலும், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும், 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *