சிறுவனின் பிறப்புறுப்பை கடித்த நாய்

ByEditor 2

Apr 28, 2025

காலி தேசிய வைத்தியசாலையில் ஏழு வயதுடைய சிறுவன் நீர் வெறுப்பு நோயால் இன்று (27) உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வீட்டில் வளர்த்து வந்த நாய் சிறுவனின் பிறப்புறுப்பு பகுதியை கடந்த மாதம் கடித்துள்ளதாகவும், பின்னர் சிறுவன் இது குறித்து வீட்டாரிடம் எதுவும் கூறாமல்,  கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

பின்னர் சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததை் தொடர்ந்து, சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் கடந்த 24ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 

பிரேத பரிசோதனையின் பின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *