2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 846,221 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை வாகன வாடகை
அதன்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 20 நாட்களில் 123,945 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை
இந்த காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 24,776 ஆகும்.
அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 14,060 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 10,873 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 9,387 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
மேலும் , அவுஸ்திரேலியாவிலிருந்து 8,404 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 5,719 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
