நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் உள்ளது.
எனவே, வேலையின் போது போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுப்பதும் முக்கியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.