GovPay கட்டண அமைப்புக்கு தபால் திணைக்களம் எதிர்ப்பு

ByEditor 2

Apr 17, 2025

போக்குவரத்து அபராதங்களுக்கான GovPay கட்டண அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதால் இலங்கையின் தபால் திணைக்களம் கணிசமான வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.  

புதிய டிஜிட்டல் சேவையானது, அத்தகைய கொடுப்பனவுகளிலிருந்து தபால் திணைக்களத்தால் ஈட்டப்படும் வருமானத்தை நீக்கியுள்ளது என்று தபால் தொழிற்சங்க முன்னணி (UPTUF) தெரிவித்துள்ளது.

தபால் அலுவலக அடிப்படையிலான அபராதக் கட்டணங்களிலிருந்து இந்த மாற்றத்தால் தபால் திணைக்களம் ஆண்டு வருவாயில் ரூ. 600 மில்லியன் முதல் ரூ. 800 மில்லியன் வரை இழக்கிறது என்று தொழிற்சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

தபால் திணைக்களம் ஏற்கனவே தபால் நிலையங்களில் பொலிஸிற்கான அபராதம் செலுத்தும் நபர்களுக்கு புதிய குறுஞ்செய்தி அறிவிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ள போதிலும், போக்குவரத்து அபராதங்களுக்கான இந்த புதிய டிஜிட்டல் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி வெளிப்படுத்துகிறது.

அபராதம் செலுத்திய நபருக்கும், சம்பந்தப்பட்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரிக்கும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட உள்ளதாகக் கூறிய தொழிற்சங்கம், பொலிஸ் பிரிவின் பதில் இல்லாததால் இது செயல்படுத்தப்படவில்லை என்று கூறியது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை எதிர்க்கவில்லை என்பதை வெளிப்படுத்திய தொழிற்சங்கம், தபால் திணைக்களத்தால் வடிவமைக்கப்பட்ட குறுஞ்செய்தி அபராத முறையைத் தொடங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது, வருவாய் இழப்பு திறைசேரியை நேரடியாகப் பாதிக்கக்கூடும் என்று எச்சரித்தது.

GovPay நிகழ்நிலை போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், அதன் SMS அபராத முறையைத் திருத்தி ஒருங்கிணைக்குமாறு தொழிற்சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியது. 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *