யானை மீது மோதிய மோட்டார் சைக்கிள்

ByEditor 2

Apr 15, 2025

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் கன்னியா பகுதியில் யானை மீது மோதி மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் நண்பன் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது.

வவுனியா புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் 22 வயதுடைய நண்பனே விபத்தில் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று யானை மீது மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்க முயன்ற போது குளிரூட்டி பழுதடைந்து காணப்பட்டதால் சடலத்தை மூதூர் அல்லது கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *