போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

ByEditor 2

Apr 11, 2025

யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர்  கைதுசெய்யப்பட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது.

19 வயதான இந்தச் சந்தேக நபரிடம் இருந்து 94 போதை மாத்திரைகளும் 465 கிராம் கஞ்சா கலந்த மாவாவும் மீட்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *