இரண்டு மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய கயர்ஸ் ரக வாகனம்

ByEditor 2

Mar 17, 2025

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை இந்திராபுரம் A-9 வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிளை கயர்ஸ் ரக வாகனம் மோதித்தள்ளி விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

குறித்த விபத்தானது இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இரண்டு மோட்டார் சைக்கிளை கயர்ஸ் ரக வாகனம் மோதியதால் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரு ஆண்களும் ஒரு யுவதியும் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பளை போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *