மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (11) பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டபிள்யூ. கே. எஸ். யு. பிரேமசந்திர, கே. பிரியந்த பெர்னாண்டோ ,ஏ. பிரேமசங்கர் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

