கொழும்பு பங்குச் சந்தையில் பங்குபரிவத்தனை நடவடிக்கை இன்றைய தினம் சரிவு தன்மையில் நிறைவடைந்துள்ளது.
இதன்படி இன்றைய நாள் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 290.21 புள்ளிகளால் சரிவடைந்து 15,710.57 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், எஸ் எண்ட் பி ஸ்ரீலங்கா 20 பங்கு விலைச் சுட்டெண், 2.70 புள்ளிகள் சரிவடைந்து 5 ,614.56 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதற்கமைய, இன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது 2.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.