தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்

ByEditor 2

Mar 6, 2025
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

கிழக்கில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் | A Decomposed Body Was Found In The East

 சுமார் 35 முதல் 38 வரையான வயதுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இச்சடலமானது கடும் நீல நிற ரீசேட் அணிந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *