மட்டக்களப்பு – மூதூர் வீதியின் 64ஆம் கட்டை பகுதியில் சனிக்கிழமை (01) பேருந்து மற்றும் லொறி நேருக்கு நேர்மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.இவ் விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த 32 பேர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக மூதூர் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்