பரீட்சார்த்தியை தாக்கி அதிபர் கைது

ByEditor 2

Mar 3, 2025

பரீட்சார்த்தியை தாக்கி அதிபர் கைது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனைத் தாக்கி அவரது காதில் காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பாடசாலையின் அதிபரை இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹிங்குராக்கொடை பதில் நீதவான் நாலக மிஹிர பண்டார உத்தரவிட்டார். தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர் தொடர்பாக நீதித்துறை மருத்துவ அதிகாரி நடத்திய மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மெதிரிகிரிய பொலிஸாருக்கு உத்தரவிட்ட பதில் நீதவான், சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் மேலும் உத்தரவிட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் பொலன்னறுவை கவுடுலுவெவவைச் சேர்ந்த டி.ஜி. ரோஹித கமல் தர்மசேன ஆவார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *