இன்று இலங்கையில் நோன்பு ஆரம்பம்

ByEditor 2

Mar 1, 2025

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நேற்று தென்படவில்லை எனக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. நாட்டின் எப்பாகத்திலும் தலைப் பிறை தென்படாததால் இலங்கை வாழ் மக்கள் புனித ஷஹ்பான் மாதத்தை இன்று பூர்த்தி செய்யுமாறும், இன்று மஹ்ரிபு தொழுகையுடன் புனித ரமழான் மாதம் ஆரம்பமாவதாகவும் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழுவின் பிரதித் தலைவர் மெளலவி ஹிஸாம் அல்பத்தாஹி உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

இன்று முதல் இஸ்லாமியர்கள் புனித ரமழானுக்கான நோன்பு நோற்றலை ஆரம்பிக்கலாம் என தெரிவித்தார்.

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் மாநாடு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *