காணியின் பெறுமதி அதிகரிப்பு (கொழும்பு)

ByEditor 2

Feb 28, 2025

கொழும்பில் காணியின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 7.7 சதவீதம் கொண்ட அதிகரிப்புடன் 236.8 ஆகப் பதிவாகியுள்ளது.  

கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகள் முறையே 9.9சதவீதம், 9.4 சதவீதம் மற்றும் 3.9 சதவீதம் கொண்ட வருடாந்த அதிகரிப்புகளுடன் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன.

அரையாண்டு அடிப்படையில், காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் 2.9 சதவீதத்தினால் மெதுவான வேகத்தில் அதிகரித்துள்ளது.

காணி அதிகரிப்பிற்கான அதிகூடிய பங்களிப்பு வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியிலிருந்து இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைக் குறிகாட்டிகள் காணப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *