கொள்ளையடித்த பொருட்கள் மீட்பு

ByEditor 2

Feb 28, 2025

தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்ற இரண்டு சந்தேக நபர்கள் வெளிப்படுத்திய தகவல்களின்படி, களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள், அவர்கள் திருடிய 9 மிமீ பிஸ்டல்களுக்கான 13 தோட்டாக்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு முச்சக்கர வண்டி மற்றும் 13 தோட்டாக்களை மீட்டுள்ளனர்.

குறித்த இரண்டு சந்தேக நபர்களும் கடந்த 23ஆம் திகதி வெலிபென்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டபோது அவர்களிடம் இருந்து 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 6 கிராம் 100 மில்லிகிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் குறித்து களுத்துறை குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *