கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு (UPDATE)

ByEditor 2

Feb 19, 2025

புதிய இணைப்பு

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான சஞ்சீவ குமார சமரரத்ன, அல்லது “கணேமுல்ல சஞ்சீவ” இன்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை, சந்தேக நபர் ஒரு துளையிடப்பட்ட புத்தகத்திற்குள் மறைத்து, துப்பாக்கியின் வடிவத்தில் பக்கங்கள் வெட்டப்பட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் எடுத்துவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், துப்பாக்கிதாரி இதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் புத்தகத்தை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு : வெளியாகும் புதிய தகவல்கள் | Shooting Inside Aluthkade Court Complex

சந்தேக நபர் ஒரு வழக்கறிஞராக மாறுவேடமிட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதைக் காட்டும் சிசிரிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இரண்டாம் இணைப்பு

இன்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான “கணேமுல்ல சஞ்சீவ” எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர், வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இரண்டாம் இணைப்பு

புதுக்கடை (Aluthkade) நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றபோது நீதிமன்ற வளாகத்தினுள் இருந்த பொதுமக்கள் அனைவரும் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக அனைவரும் இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், நீதிமன்றத்திற்கு முன்பாக இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு

புதுக்கடை  (Aluthkade) நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று நேரத்திற்கு முன்பு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான “கணேமுல்ல சஞ்சீவா” சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *