மதுபானத்துடன் சந்தேகநபர் கைது

ByEditor 2

Feb 3, 2025

புலத்சிங்கஹல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தன்வாடிய பிரதேசத்தில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளதாக புலத்சிங்கஹல பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நபர் 50 வயதுடைய கந்தன்வாடிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 101 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்சிங்கஹல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *