துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் கைது

ByEditor 2

Jan 24, 2025

கிரிபாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கப்பாலய வெல்யாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபாவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (23) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

48 வயதுடைய கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லம்பகல சந்தியில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 29 வயதுடைய தல்கஸ்பே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து வாள், கத்தி மற்றும் 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *