இந்தியா – புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளக மைதானத்தில் நேற்று நடைபெற்ற கோ கோ என்ற உலகக் கிண்ண கபடிப்போட்டியில், இந்திய ஆண்கள் அணி, இலங்கை அணியை 100-40 என்ற கணக்கில் வெற்றிக்கொண்டு, அரையிறுதிக்கு முன்னேறியது.
அதேவேளை, பெண்கள் அணியும் 109-16 என்ற கணக்கில் அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்தப்போட்டியின் போது இலங்கை அணியினரும் கடுமையான சவாலை வழங்கினர்.
அரையிறுதிப் போட்டி
எனினும், இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதேவேளை, இந்திய மகளிர் கபடி அணி, பங்களாதேஸ் அணியை 109-16 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தநிலையில், இன்று இடம்பெறவுள்ள அரையிறுதியில் இந்திய அணி, தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடுகிறது. அத்துடன் ஈரானும் நேபாள அணியும் இரண்டாவது அரையிறுதியில் மோதுகின்றன.