74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு

ByEditor 2

Jan 18, 2025

2024 பொதுத் தேர்தல் மற்றும் அது தொடர்பான தேர்தல்களில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், தேர்தலில் போட்டியிட்டுத் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 800 வேட்பாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்தந்த பொலிஸ் நிலையங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *