சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர் கைது

ByEditor 2

Jan 6, 2025

  எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது 05 மாத சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய மாமா ஒருவரை மொனராகலை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுரேகெட்டிய தலாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் சுமார் நான்கு வருடங்களாக சிறுமியின் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.

பொலிஸில் தாயார் முறைப்பாடு

இந்நிலையில் வும், தனது தாயும் சகோதரியும் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது மாமா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தாயிடம் கூறியதையடுத்து அது தொடர்பில் பொலிஸில் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் மொனராகலை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *