கொள்ளையர்கள் இருவர் பெண்ணிடம் வழிப்பறி

ByEditor 2

Jan 4, 2025

மொனராகலை,புத்தல பிரதேசத்தில் முகமூடி அணிந்திருந்த இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை வழிமறித்து அச்சுறுத்தி தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெண்ணை அச்சுறுத்தி கொள்ளை

சம்பவத்தன்று, புத்தல பிரதேசத்தில் பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது முகமூடி அணிந்திருந்த இருவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர்

இதன்போது இந்த பெண் மோட்டார் சைக்கிளுடன் கீழே வீழ்ந்த நிலையில் , சந்தேக நபர்கள் இருவரும் குறித்த பெண்ணை அச்சுறுத்தி அவரது கழுத்திலிருந்த தங்க மாலை, தோடுகள் மற்றும் பணப் பையிலிருந்த 15 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் புத்தல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *