“கைதிகளை மிருகங்களைப் போன்று நடத்த வேண்டாம்”

ByEditor 2

Jan 3, 2025

கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை நினைவு கூர்ந்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, கைதிகளை மிருகங்களைப் போன்று நடத்த வேண்டாம் என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீண்ட இரும்புச் சங்கிலியால் கைவிலங்கிடப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்ற அறையில் வரிசையாக ஆஜர்படுத்தியமைக்காக சிறைச்சாலை அதிகாரிகளை குற்றம் சுமத்திய போதே நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.

சந்தேகநபர்களை மனிதர்களைப் போன்று நடத்த வேண்டும் என வலியுறுத்திய நீதவான், இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம் என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் விடுமுறை என்பதால், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதிமன்றப் பெயரின் வழக்கு எண் 03 நீதிமன்றில் அழைக்கப்பட்டது. விளக்கமறியலில் ஆஜர்படுத்தப்பட்ட சுமார் நாற்பது சந்தேக நபர்கள் ஒரே சங்கிலியில் கைவிலங்குகளுடன் நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டனர்.

நீதிமன்ற அறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கைதிகளை பார்த்த நீதவான், இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டியதுடன், கைதிகளை மனிதர்களாக நடத்துமாறு கடுமையாக எச்சரித்தார்.

நடந்த சம்பவத்திற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர். நீதவான் பிறப்பித்த உத்தரவின் பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் கைவிலங்குகளுடன் நீதிமன்ற அறையில் இருந்த கைதிகளின் சங்கிலிகளை அகற்றுனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *