போதையில் வாகனம் செலுத்துவோரின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்படும்!

Byadmin

Dec 26, 2024

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின் அனுமதிப்பத்திரம் 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் பொலிஸாரால் இரத்து செய்யப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.எனவே, மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என அனைத்து சாரதிகளையும் இலங்கை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் அமுல்படுத்தப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே பொலிஸார் இதனை அறிவித்துள்ளனர்.அதன்படி, இன்று (26) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 395 மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *