கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

Byadmin

Dec 23, 2024

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,“பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். நாடளாவிய ரீதியிலுள்ள 2000க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினத்தன்று ஆராதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்தந்த பொலிஸ் பகுதிகளில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர், பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தேவாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள சிவில் குழுக்களுடன் ஒருங்கிணைந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்படுவார்கள்.உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேவைப்பட்டால் இராணுவத்தினரிடம் அல்லது ஏனைய பாதுகாப்புப் படையினரின் உதவியை பொலிஸார் நாடுவார்கள். இதேவேளை, பண்டிகைக் காலங்களில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டும் சாரதிகளை பரிசோதிக்க விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விரிவான பாதுகாப்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சன நெரிசலான பகுதிகளில் குற்றச் செயல்களைக் கண்காணித்து அடையாளம் காண்பதற்காக 500க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடை அணிந்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *