ஜனாதிபதி அநுரவை பாராட்டிய ரணில்

ByEditor 2

Dec 17, 2024
Screenshot

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (16) புதுடில்லியில் வெளியிட்ட கூட்டறிக்கையில் இருந்து இந்திய-இலங்கை ஒத்துழைப்பை மேலும் ஸ்திரப்படுத்தி வலுப்படுத்தும் வரவேற்கத்தக்க விடயம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அறிக்கை ஒன்றை வௌியிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.திருகோணமலையை பிராந்திய ஆற்றல் மற்றும் கைத்தொழில் மையமாக அபிவிருத்தி செய்து பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை பாராட்டுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *