வியட்நாமில் நடைபெற்ற ஆசிய திறந்த டேக்வாண்டோ 2024 போட்டியில் பாத்திமா பழைய மாணவி சாதனை.
29 நாடுகளுக்கு இடையில் நடைப்பெற்ற போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாத்திமாவில் 2024 ஆண்டு க.பொ. த சாதாரண தரத்தில் சித்தியடைந்து வெளியாகிய பழைய மாணவி ராசிக் பரீத் மஸியத் சாரா வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்து புத்தளத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.