ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.7,115 ஆகவும் சவரன், ரூ.56,920 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, 7,130 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 120 அதிகரித்து, 57,040 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் 55 ஆயிரத்திற்கும் குறைவாக விற்கப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது அதைவிட அதிகரித்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.