கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Byadmin

Aug 12, 2024

இன்று (12) வரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட 16 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
 மற்றுமொரு அரசியல் கட்சியும் 15 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியவர்களில் அடங்குவர்.
வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் எதிர்வரும் புதன்கிழமை (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *