உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி நகை கொள்ளை!

Byadmin

Aug 12, 2024

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை தாக்கி , முகமூடி அணிந்த நபர் ஒருவர் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில்  நேற்று (11) அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டிற்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரின் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது கல்முனை பிரதேச  நகைக்கடை ஒன்றில் இன்று   (12)  திருடப்பட்ட நகை  மீட்கப்பட்டுள்ளதுடன்  திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரும்  சம்மாந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  37 வயதுடைய சந்தேக நபரிடம்   பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *