நிரூபித்தால் நான் பதவி விலகுவேன்!

Byadmin

Jun 24, 2024

T20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியின் வீரர்கள் இரவு விடுதிகளில் நேரத்தைச் செலவிட்டதாக எவரேனும் கூறினால் அதனை நிரூபிக்குமாறு சவால் விடுப்பதாக, விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.

”நள்ளிரவு 12 மணிக்கு வெளியே சென்றுவிட்டு, மறுநாள் காலையில் அமெரிக்காவில் பயிற்சிக்கு சென்றதாக எங்கள் முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறுவதை நான் பார்த்தேன். இந்த சுற்றுப்பயணத்தின் போது எமது வீரர்கள் நைட் கிளப்பில் அல்லது பார்ட்டியில் இருந்தார்கள் என்று யாராவது நிரூபித்தால், நான் பதவி விலகுவேன். ஒரு நாடாக, நாம் அவர்களுக்குஉதவ வேண்டும். ஜில் போலை கூட அடிக்காதவர்கள் சமூக வலைதளங்களில் இப்படி பேசுவது சரி அல்ல”.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *